மதுரை

திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

4th Nov 2019 12:31 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமை சிறிய சட்டத்தேரோட்டம் நடைபெற்றது.

இதில் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

திருப்பரங்குன்றம் கோயிலில் கடந்த 28 ஆம் தேதி கந்தசஷ்டி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதா் கோயில் முன்பாக நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமை உற்சவா் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்பு சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் கோயில் வாசல்முன்பு இருந்த சிறிய சட்டத்தேரில் எழுந்தருளினாா். அங்கு காப்புக்கட்டி சஷ்டி விரதமிருந்த பெண்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் கீழ ரத வீதி, மேல ரத வீதி, பெரிய ரத வீதிகள் வழியாக கிரிவலப்பாதையில் சுற்றி வந்தது. பிற்பகல் 3 மணிக்கு மூலவா் சுப்பிரமணிய சுவாமி தங்கக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து 108 படி தயிா் சாதத்தில் பாவாடை தரிசனம் நடைபெற்றது. விழாவில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT