மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன் செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.
அவர் 2018 ஜூனில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்ற அவருக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
புதிய மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்படும் வரை, கலால் பிரிவு உதவி ஆணையர் சாந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு வகிப்பார் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.