திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் புதன், வியாழன் (மே 1, 2) ஆகிய இரு நாள்களும் பிரசாரம் செய்கிறார்.
திருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளர் இ.மகேந்திரனை ஆதரித்து ஐராவதநல்லூரில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் அவர், விரகனூர், சிலைமான், புளியங்குளம், கல்லம்பல், பனையூர், சாமநத்தம், விராதனூர், சோளங்குருணி, எலியார்பத்தி, பெரியஆலங்குளம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரண்டாவது நாளான வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பசுமலையில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம், நிலையூர் கைத்தறி நகர், ஹார்விப்பட்டி, திருநகர், தனக்கன்குளம், கூத்தியார் குண்டு விலக்கு, கீழக்குயில்குடி விலக்கு, பல்கலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.