மதுரை அருகே உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை தமிழர் ஒருவர் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
மதுரை வாடிப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாடிப்பட்டி தேவாலயம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்தில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ராசய்யா மகன் ஆனந்தராஜ்(38) என்பது தெரியவந்தது.
ஆனால், அதற்குரிய எந்த ஆவணங்களும் ஆனந்தராஜிடம் இல்லை. இதையடுத்து அவரை வாடிப்பட்டி போலீஸார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.