திருமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருமங்கலம் மின்செயற்பொறியாளர் எஸ்.மங்களநாதன் தெரிவித்துள்ளார்.
மின்தடைபடும் பகுதிகள்: திருமங்கலம் நகரப் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.