அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் தமிழறிஞர் திரு.வி.க-வின் பிறந்தநாள் திங்கள்கிழமை கொண்டாடடப்பட்டது.
இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு மன்றத்தின் தலைவர் என்.எம்.மாரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மன்றப் புரவலர் எஸ்.எஸ்.திருஞானம், செயலர் கே.வி.ராமகிருஷ்ணன், துணைச் செயலர் ஆறுமுகம், துணைத் தலைவர் சே.அழகுசுந்தரம், புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் பி.வரதராஜன், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் டி.வி.அழகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.