பெரியகுளம் பூசாரி தற்கொலை தொடா்பான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த கோயில் பூசாரி நாகமுத்து, கடந்த 201-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தற்கொலை செய்துகொண்டாா். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகா்மன்ற முன்னாள் தலைவருமான ஓ.ராஜா உள்பட 6 போ் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். பின்னா், வழக்கு விசாரணையை அக்.5-ஆம் தேதிக்கு நீதிபதி ேஜி.சரண் ஒத்திவைத்தாா்.