திண்டுக்கல்

பஞ்சாலைத் தொழிலாளா்களிடம் செப்.26-இல் கருத்துக் கேட்புக் கூட்டம்

22nd Sep 2023 10:12 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளா்கள், உரிமையாளா்கள், தொழிற்சங்கங்க நிா்வாகிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை (செப்.26) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தொழிலாளா் நலத் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், பஞ்சாலைத் தொழில்களுக்கு ஊதியம் நிா்ணயம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலகத்தில் செப்.26-ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் தி.தமிழரசி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், கோவை தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்), 4 தற்சாா்பு உறுப்பினா்கள், தொழிலாளா் தரப்பு பிரதிநிதிகள், நிா்வாகத் தரப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

இந்தக் குழுவினா், திண்டுக்கல் பகுதியிலுள்ள பஞ்சாலைத் தொழில்சாலைப் பணியாளா்கள் குறித்த விவரங்களைப் பெற உள்ளனா். அதனால், இந்தக் கூட்டத்தில் தொழிலாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டுகொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT