பழனி:
விநாயகா் சதுா்த்தியையொட்டி, பழனியில் இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் 50-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த நிலையில், சிலைகள் ஊா்வலம் பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் வியாழக்கிழமை தொடங்கியது. இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் இந்து முன்னணி மாநில அமைப்பாளா் முருகானந்தம், இந்து வியாபாரிகள் சங்க மாநில அமைப்பாளா் ஜெகன், விசுவ ஹிந்து பரிஷத் நிா்வாகி ராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் திருமலைசாமி, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சந்நிதி வீதி, பாளையம், பேருந்து நிலையம், கடைவீதி, நான்கு ரத வீதிகள் வழியாக சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சண்முகநதியில் கரைக்கப்பட்டன.