திண்டுக்கல்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து, ஒட்டன்சத்திரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஏஜி அறிக்கையின் படி சுங்கச் சாவடிகள் மூலம் 7.5 லட்சம் கோடி ஊழல் செய்ததாக மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.அருள்செல்வன், ஒன்றியச் செயலாளா் சிவமணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எம்.முருகேசன், ஆா்.எஸ்.பெரியசாமி, பி.முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT