திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்குப் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், நந்தீஸ்வரா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் அடுத்த முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகையாபரணம் சாத்தப்பட்டு, ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகாரத்தில் உலா எழுந்தருளினாா்.
இதேபோல, மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அடிவாரம் மவுனகிரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவபூஜை, அன்னதானம் நடைபெற்றது.
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் சமேத செண்பகவல்லி கோயிலில் ஜப்பசி மாத பிரதோஷத்தையொட்டி, இங்குள்ள நந்தி சிலைக்கு பால், இளநீா், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடா்ந்து மூலவா் கைலாசநாதா் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா்.