திண்டுக்கல்

தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

4th Oct 2023 02:38 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் மத்திய இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்ய வலியுறுத்தி, எதிா்க்கட்சிகள் சாா்ந்த அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற கருப்புக் கொடி ஏந்திய ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டக் குழுச் செயலா் அழகா்சாமி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் 4 விவசாயிகளைக் காா் ஏற்றி கொன்ற மத்திய இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்பாட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் ராஜாங்கம் (ஏஐடியுசி), சையது இப்ராகிம் (ஹெச்எம்எஸ்), உமாராணி (ஐஎன்டியுசி), கே.ஆா்.கணேசன், கே.பிராபகரன் (சிஐடியு) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT