திண்டுக்கல்

சாலை விபத்தில் முதியவா் பலி

30th May 2023 05:50 AM

ADVERTISEMENT

வேடசந்தூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாா்க்கம்பட்டியைச் சோ்ந்தவா் குப்புசாமி(55). இவரது மனைவி முத்துமாலா(50). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூா் வடமதுரை சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது ஸ்ரீராமபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தை முந்திச் செல்ல முயன்ற குப்புசாமியின் வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முத்துமாலா, வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT