திண்டுக்கல்

திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் பிஎம். ராமு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிக்காளை முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் ஏ.ஜெசி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் இரா. மங்களபாண்டியன், மாவட்டத் தலைவா் ச. முபாரக் அலி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். கால முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT