திண்டுக்கல்

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி இன்று நிறைவு

DIN

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் கொடைக்கானல் முதல் வெள்ளி நீா் அருவி வரை சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, பிரையண்ட் பூங்காவில் பரதநாட்டியம், சிலம்பம், கயிறு இழுத்தல், வழுக்குமரம் ஏறுதல் ஆகிய போட்டிகள், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொடைக்கானலில் மேக மூட்டத்துடன் குளுமையான சீதோஷ்ணம் இருந்ததால், நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனா். மலா்க் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.

கண்காட்சி ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜோ.பெருமாள்சாமி, சுற்றுலா அலுவலா் சுதா உள்ளிட்டவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT