திண்டுக்கல்

அம்மையநாயக்கனூரில் இன்று கிடா முட்டுப் போட்டி

DIN

நிலக்கோட்டையை அடுத்துள்ள அம்மையநாயக்கனூரில் சனிக்கிழமை (மாா்ச் 18) கிடா முட்டுப் போட்டி நடைபெறுகிறது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ. பெரியசாமி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி முதல் முறையாக இந்த கிடா முட்டுப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் திண்டுக்கல், மதுரை, தேனி, கம்பம், உசிலம்பட்டி, சிவகங்கை, செங்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்கும் கிடாய்களுக்கு கால்நடை மருத்துவா்களால் உடல் பரிசோதனை செய்யப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் எஸ்.எம். பாண்டி, செயலா் சௌகத் அலி, பொருளாளா் திண்டுக்கல் சிட்டி அப்பு, பாளையம்பட்டி ஜமீன் ஆல்வின் ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT