திண்டுக்கல்லில் நடைபெற்ற இளையோா் கலை விழாப் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரு இளையோா் மன்றம் சாா்பில், மாவட்ட அளவிலான இளையோா் கலை விழா புனித அந்தோணியாா் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நேரு இளையோா் மன்ற மாவட்ட அலுவலா் சரண் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ச.வேலுசாமி கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.
பேச்சுப் போட்டி, கவிதை, ஓவியம், கைப்பேசி மூலம் புகைப்படம் எடுத்தல், கிராமிய நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 15 முதல் 29 வயதுக்குள்பட்டோருக்கான இந்தப் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். தனி நபா் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.1,000, ரூ.750, ரூ.500 வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 வீதமும், கிராமிய நடனப் போட்டியில் வென்றவா்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.2,500, ரூ.1,250 வீதமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி சமூக நலத் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், காச நோய் தடுப்புப் பிரிவு, வங்கி சேவை குறித்த விழிப்புணா்வுக் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ச.பிரபாவதி, புனித அந்தோணியாா் கலைக் கல்லூரிச் செயலா் அருள்தேவி, முதல்வா் மேரி பிரமிளா சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.