திண்டுக்கல்

கொடைக்கானலில் காலாவதியான தின் பண்டங்கள் விற்பனை செய்தவருக்கு அபராதம்

DIN

கொடைக்கானல் அடுமனையில் காலாவதியான தின் பண்டங்கள் விற்பனை செய்ததாக அதன் உரிமையாளருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்படுகிறது. இதனால், இங்குள்ள உணவகங்கள், சாக்லேட் கடைகள், அடுமனைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் லாரன்ஸ் கடந்த சில தினங்களாக சோதனை மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள அடுமனையில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, அந்த அடுமனைக்குச் சென்று அங்கிருந்த உணவுப் பொருள்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது, அங்கு காலாவதியாகி பல நாள்களான உணவுப் பொருள்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது . இதையடுத்து, அதன் உரிமையாளருக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT