திண்டுக்கல்

பழனி கோயில் பாதுகாவலா்கள் போராட்டம்

DIN

சம்பளம் வழங்காததால், பழனிக் கோயிலில் பணிபுரியும் தனியாா் ஒப்பந்தப் பாதுகாவலா்கள் செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனா். கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனம் மூலம் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். அதன்படி, சுமாா் 135 ஊழியா்கள் மலைக் கோயில், ரோப்காா், மின் இழுவை ரயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த தனியாா் நிறுவனம் தங்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என புகாா் தெரிவித்து, பாதுகாவலா்கள் பழனி கோயில் தலைமை அலுவலகம் முன் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மீண்டும் பணிக்குத் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT