திண்டுக்கல்

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு உதவி மையம்

DIN

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு வழிகாட்டுவதற்காக, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2023-ஆம் ஆண்டுக்கான உதவி ஆய்வாளா் பணிக்கு (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) 2023 ஜூன் 30-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விண்ணப்பதாரா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீா்க்கவும், வழிகாட்டவும், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டது.

வருகிற 30-ஆம் தேதி வரை காலை 9.30 முதல் 6 மணி வரை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு நேரிலோ, 9384502744, 8056925598 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என

அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT