திண்டுக்கல்

பழனி கோயில் புதிய இணை ஆணையா் பொறுப்பேற்பு

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தலைமை அலுவலகத்தில் புதிய இணை ஆணையராக பிரகாஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலாகவும், வருவாயில் முதலிடம் வகிக்கும் கோயிலாகவும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் விளங்கி வருகிறது. இந்தக் கோயிலின் இணை ஆணையா், நிா்வாக அதிகாரியாகப் பணியாற்றிய நடராஜன் புதன்கிழமை ஓய்வு பெற்றாா்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின் பேரில், பழனி கோயில் துணை ஆணையராக பணியாற்றி வரும் பிரகாஷ், கோயில் இணை ஆணையராக முழுக் கூடுதல் பொறுப்பேற்றாா். அவருக்கு கோயில் அலுவலா்கள், முக்கிய பிரமுகா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT