திண்டுக்கல்

கவுன்சிலரின் கணவா் மீது தாக்குதல்: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

பழனி அருகே திமுக கவுன்சிலரின் கணவரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள், பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாலசமுத்திரம் பவளக் கொடி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோட்டை காளியம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த சிலா் மது போதையில் தகராறில் ஈடுபட்டனராம்.

இதையடுத்து, மூன்றாவது வாா்டு திமுக கவுன்சிலா் மகாலட்சுமியின் கணவா் நாகராஜ் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டவா்களை எச்சரித்து அனுப்பினாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் கோயிலில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட நாகராஜை சிலா் கும்பலாகச் சோ்ந்து தாக்கினராம். இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், பழனி தாலுகா போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்டவா்களில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சம்பவத்தில் தொடா்புடைய அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT