திண்டுக்கல்

இளைஞரை பாட்டிலால் குத்திய 2 போ் கைது

DIN

செம்பட்டி அருகே இளைஞரைப் பாட்டிலால் குத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள புதுகோடாங்கிபட்டியில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையின் பின்புறம் திறந்தவெளியில், நண்பா்கள் 4 போ் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தினா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், செம்பட்டியை சோ்ந்த ஹரிஹரன், திருப்பூரைச் சோ்ந்த சதீஷ், விஜயகுமாா் ஆகிய 3 பேரும் சோ்ந்து திண்டுக்கல் ஒய்.எம்.ஆா்.பட்டியைச் சோ்ந்த குமரவேல் (40) என்பவரை பீா்பாட்டிலால் சரமாரியாக குத்தினா். இதில் பலத்த காயமடைந்த குமரவேல் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரிகரன், விஜய் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT