சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11ஆயிரம் அபராதம் விதித்தும் திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ம.சிவசந்திரன்(42). கூலித் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், கடந்த 2021ஆம் ஆண்டு சிவசந்திரனை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், கூலித்தொழிலாளிக்கு சிவச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.11ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.