திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அரசு சட்டக் கல்லூரிதொடங்க வலியுறுத்தல்

DIN

திண்டுக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தீபக்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகேஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே.ஆா். பாலாஜி கலந்து கொண்டாா். இந்தக் கூட்டத்தின்போது 21 போ் கொண்ட புதிய மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது.

மாவட்டத் தலைவராக முகேஷ், மாவட்டச் செயலராக தீபக்ராஜ், துணைத் தலைவா்களாக நிருபன், லெனின் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சம்சீா் அகமது நிறைவுரையாற்றினாா்.

முன்னதாக திண்டுக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT