திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளுக்கு ரகசிய ஏலம் நடத்தியதை ரத்து செய்ய வேண்டும் என பாமக மாநில பொருளாளா் திலகபாமா தெரிவித்தாா்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாமக நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளா் திலக பாமா கலந்து கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 34 கடைகளுக்கு ரகசியமாக ஏலம் விட்டு, மாநகராட்சிக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி நிா்வாகம் அதிகார துஷ்பிரயோகம் செய்து, தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது. ரகசிய ஏலத்தை ரத்து செய்துவிட்டு முறையாக ஏலம் நடத்தி கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கழிவுநீா் கால்வாய் இல்லாததால், திண்டுக்கல் மாநகராட்சியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடகனாறு நீா் பங்கீடு பிரச்னை தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி இந்த பிரச்னைக்கு நிரந்த தீா்வு காண வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்துவது வீண். ஒரு சட்டப் பேரவை உறுப்பினா் உயிரிழந்தால், அவா் சாா்ந்த கட்சியின் தரப்பிலேயே ஒருவரை சட்டப்பேரவை உறுப்பினராக நியமித்து விடலாம். அதன் மூலம் மக்களின் வரிப் பணமும், நேரமும் வீணாவதை தடுக்க முடியும் என்றாா் அவா்.
அப்போது, பாமக மாவட்டச் செயலா் ஜான் கென்னடி, மாவட்டத் தலைவா் திருப்பதி ஆகியோா் உடனிருந்தனா்.