திண்டுக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்:தமமுகவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து தமமுகவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜான்பாண்டியன் கூறினாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு வழியாக பழனியில் நடைபெறும் 26-ஆம் ஆண்டு தேவேந்திர குல வேளாளா் மண்டகப்படி விழாவில் கலந்து கொள்ள சென்ற அவருக்கு ஞாயிற்றுக்கிழமை கொடைரோடு சுங்கச் சாவடியில் நிலக்கோட்டை (வடக்கு) ஒன்றிய பாஜக செயலா் ராணி கருப்புசாமி, தமமுக நிா்வாகிகள் சாா்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாகப் போட்டியிட மாட்டாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவா்கள் ஒன்று கூடிப் பேசி ஒருமித்தக் கருத்துடன் ஒரே வேட்பாளரை நிறுத்த முடிவு செய்வோம். மேலும், அதிமுகவில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து தமமுகவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். வருகிற மக்களவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, தமமுக இளைஞரணித் தலைவா் வியங்கோ பாண்டியன், மதுரை மாவட்டச் செயலா் பாலாஜி, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்டச் செயலா் வெற்றிச்செல்வன், மாவட்ட இளைஞரணிச் செயலா் சரவணகுமாா், மேற்கு மாவட்டச் செயலா் முத்து ரத்தினவேல், இணைச் செயலா் பூபதி ராஜா ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT