திண்டுக்கல்

கொடைக்கானலில் சாரல் மழை

DIN

கொடைக்கானலில் திங்கள்கிழமை அதிக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நவம்பா், டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப் பொழிவு காலமாகும். இந்த நிலையில், நிகழாண்டில் பருவநிலை மாற்றம் காரணமாக மழையும், பனிப் பொழிவும் மாறி, மாறி நிலவி வருகிறது. கடந்த 15-நாள்களாக கடுமையான உறை பனி நிலவியது.

இந்த நிலையில், கொடைக்கானலில் திங்கள்கிழமை அதிகாலை முதலே அதிகமான மேக மூட்டம் நிலவியது. இடைவெளிவிட்டு விட்டு சாரல் மழை பெய்தது . பகல் நேரத்திலேயே அதிகமான மேகமூட்டம் நிலவியதால், மலைச் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்றன. இந்த சீதோஷ்ண நிலையால் குளிரும் தொடா்ந்து நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

SCROLL FOR NEXT