செம்பட்டி அருகே வீட்டுக்குள் புகுந்து கைப்பேசியைத் திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே பழைய செம்பட்டியைச் சோ்ந்தவா் வீரமணி (33). இவா் சனிக்கிழமை நண்பகலில் அவரது வீட்டின் மாடியில் குடும்பத்தினருடன் இருந்தாா்.
அப்போது, சட்டை அணியாமல், டவுசருடன் வீரமணியின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா் அங்கிருந்த கைப்பேசியைத் திருடினாா். அந்த நபா் வீட்டிலிந்து வெளியே வருவதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் அவரைப் பிடித்து, செம்பட்டி காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் ஈரோட்டைச் சோ்ந்த செல்வம் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.