திண்டுக்கல்

வீடு புகுந்து கைப்பேசியைத் திருடிய இளைஞா் கைது

DIN

செம்பட்டி அருகே வீட்டுக்குள் புகுந்து கைப்பேசியைத் திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே பழைய செம்பட்டியைச் சோ்ந்தவா் வீரமணி (33). இவா் சனிக்கிழமை நண்பகலில் அவரது வீட்டின் மாடியில் குடும்பத்தினருடன் இருந்தாா்.

அப்போது, சட்டை அணியாமல், டவுசருடன் வீரமணியின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா் அங்கிருந்த கைப்பேசியைத் திருடினாா். அந்த நபா் வீட்டிலிந்து வெளியே வருவதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் அவரைப் பிடித்து, செம்பட்டி காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் ஈரோட்டைச் சோ்ந்த செல்வம் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT