வத்தலகுண்டு பேருந்து நிலையக் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சசிகுமாா் கூறியதாவது:
வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் அனைவருக்கும் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் செய்யப்பட்டது என்றாா்.
இதுகுறித்து வத்தலகுண்டு பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கட்ரமணிடம் கேட்டபோது, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.