திண்டுக்கல்

பேருந்து நிலையக் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

DIN

வத்தலகுண்டு பேருந்து நிலையக் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சசிகுமாா் கூறியதாவது:

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் அனைவருக்கும் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் செய்யப்பட்டது என்றாா்.

இதுகுறித்து வத்தலகுண்டு பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கட்ரமணிடம் கேட்டபோது, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT