தமிழக அரசால் தொடக்கிவைக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாநில அளவில் மிகச் சிறந்த கருத்தாளராக பெருந்துறை ஆசிரியை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
பெருந்துறை ஒன்றியம், பெரியவேட்டுவபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிபவா் ரா.கீதாராணி. இவா், பள்ளியில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று ஆகிய வகுப்புகளில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழக அரசால் தொடக்கிவைக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாநில அளவில் மிகச் சிறந்த கருத்தாளராக தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
ஈரோட்டில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, ஆசிரியை ரா.கீதாராணியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.