கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த பேரணி கலையரங்கம் பகுதியில் தொடங்கி ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவண் ரோடு, அண்ணா சாலை, பேருந்து நிலையப் பகுதிகள் வழியாக நடைபெற்றது. பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சுற்றுச்சூழல்,இயற்கை பாதுகாப்பு குறித்து முழக்கமிட்டனா்.