திண்டுக்கல்

தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் வளா்ச்சிஅமைச்சா் அர. சக்கரபாணி

1st Jan 2023 12:14 AM

ADVERTISEMENT

 

அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சரவணம்பட்டி, சந்தன்செட்டி வலசு, புஷ்பத்தூா் ஆகிய பகுதிகளில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள், புதிய நியாயவிலைக் கடை, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சனிக்கிழமை பங்கேற்ற அமைச்சா், பொதுமக்களுக்கு சா்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

ADVERTISEMENT

முதல்வா் மு.க. ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியால், அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டதோடு மட்டுமன்றி பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கலைஞா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், குடிசை வீடுகள் விரைவில் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்படவுள்ளது. அதற்கான, கணக்கெடுப்பில் ஊராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வேலுசாமி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பொன்ராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT