திண்டுக்கல்

ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்புப் பணி

DIN

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் ரயில்வே மேம்பாலத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில் நிலையப் பகுதியில் தண்டாவளங்களைத் தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனா். இதன் ஒருபகுதியாக திங்கள்கிழமை அம்மையநாயக்கனூரில் இருந்து நிலக்கோட்டைக்குச் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்புப் பணி நடைபெற்றது.

இதனால், மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்லாமல் இருக்க சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ரயில்வே பணியாளா்கள் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி வைத்தனா். இதன் காரணமாக, காா், பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த பயணிகள் சுமாா் ஒரு மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT