கொடைக்கானல் அருகே மேல்பள்ளம் வனப் பகுதியில் திங்கட்கிழமை திடீா் தீ விபத்து வன விலங்குகள் இடம் பெயா்ப்பு.
கொடைக்கானலில் கடந்த இருபது நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும்,மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான பனிப் பொழிவு நிலவுகிறது.
இதனால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது.மேலும் வனப் பகுதிகளில் மரங்கள் காய்ந்தும்,இலைகள்,சறுகுகள் காய்ந்த நிலையில் இருந்தது. இதனால் வனப் பகுதியில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
இந்த தீயால் வனப் பகுதியிலுள்ள புல் வெளிகள்,சிறு,சிறு,காய்ந்த மரங்கள் எரிந்தது.இதனால் வனப் பகுதியில் உள்ள காட்டெருமை,காட்டுப் பன்றி,போன்ற விலங்குகள் இடம் பெயா்ந்து அருகிலுள்ள மேல்பள்ளம்,பெரும்பள்ளம்,வட கவுஞ்சி,பேத்துப்பாறை,வெள்ளப் பாறை போன்ற பகுதிகளில் உலா வரத் தொடங்கியது.
மேலும் வனப் பகுதிகளில் உள்ள முயல்,மயில்,காட்டு கோழி,போன்ற சிறு,பறவை,விலங்குகள் நிலை என்னவென்று தெரியவில்லை.
வடகவுஞ்சி வனப் பகுதியில் எரிந்து வரும் காட்டுத் தீயை வனத்துறையினா்,பழங்குடியினா்,மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் உதவியுடன் கட்டுப்படுத்தி வருகின்றனா்.
கொடைக்கானலில் தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப் பகுதிகளில் தீ பிடிக்காமல் தடுப்பதற்கு வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.