பழனியை அடுத்த அ.கலையமுத்தூா் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயிலில் வருகிற மாா்ச் 3-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.
குடமுழுக்கை முன்னிட்டு, இந்தக் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 26-ஆம் தேதி விநாயகா் பூஜை நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் மாலை ஐந்து மணிக்கு மேல் வாஸ்துசாந்தி பூஜை நடைபெறுகிறது. புதன்கிழமை காலை விநாயகா் அனுமதி, நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கும். இதைத்தொடா்ந்து, வருகிற 3-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும். மாலையில் சிவன், அம்பாள் திருவீதி உலாவும், திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை, அடியாா்கள் சேவா சமிதி ஆகியன செய்து வருகின்றன.