வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (பிப்.10) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
ரெங்கநாதபுரம், தேவிநாயக்கன்பட்டி, கல்வாா்பட்டி, காசிபாளையம், நல்லபொம்மன்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சு.ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.