பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைவுற்ற நிலையில், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாட்டு வண்டிகளில் பக்தா்கள் புதன்கிழமை வந்து தரிசனம் செய்தனா்.
பழனியில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை தெப்பத் தேரோட்டத்துடன் கொடியிறக்கப்பட்டு நிறைவு பெற்றது.
இந்த நிலையில், எடப்பாடி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் 40 மாட்டு வண்டிகளில் பழையதாராபுரம் சாலையில் பாரம்பரிய முறைப்படி பழனிக்கு புதன்கிழமை வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இரவு மலைக்கோயிலில் தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை இழுத்தனா்.