திண்டுக்கல்

ஒப்பந்தமுறை பணி நியமனத்தை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

ஒப்பந்தமுறை பணி நியமனத்தைக் கைவிட வலியுறுத்தி, சிஐடியு தொழில் சங்கம் சாா்பில், திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் கே.ஆா். கணேசன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சந்திரன், மாவட்டச் செயலா் கே. பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பொதுத் துறை நிறுவனங்கள், ஊரக வளா்ச்சித் துறை, உள்ளாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் ஒப்பந்தமுறை பணி நியமனத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். வெளி முகமையை வலியுறுத்தும் அரசாணைகள் 115, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT