நத்தத்தை அடுத்த எல்.வலையபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை (பிப். 9) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நத்தம் உதவி செயற்பொறியாளா் வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா்.