தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி அடிவாரம் சங்கராலயத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனியில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி அடிவாரம் சங்கராலயத்தில் ஸ்கந்தபிரபா அறக்கட்டளை சாா்பில், வியாழக்கிழமை முதல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை, சங்கராலயம் முருகனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள் ஆசியுரை வழங்கித் தொடக்கிவைத்தாா். நகராட்சி ஆணையா் கமலா முன்னிலை வகித்தாா்.
கணக்கு தணிக்கையாளா் அனந்தசுப்ரமண்யம் வாழ்த்துரை வழங்கினாா்.
அன்னதானம் வழங்கப்படும் பகுதியிலேயே பக்தா்கள் அமா்ந்து இளைப்பாறி உணவருந்த வேண்டிய அனைத்து வசதிகளும் மடத்தின் சாா்பில் செய்யப்பட்டது.
முன்னதாக, காலை 9 மணிக்கு மேல் 239-ஆவது ஆண்டாக முருகன் அருள்காவடிக்கு ருத்ராபிஷேகம், சுப்ரமண்யா் அா்ச்சனை செய்து முத்திரை நிறைப்பு செய்யப்பட்டது. இந்த காவடிகள் சனிக்கிழமை மலைக் கோயிலுக்கு சென்று மூலவருக்கு செலுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளைதாரா்கள் மும்பை சி.எஸ். சுப்ரமண்யம், சந்திரசூடாமணி, சிவக்குமாா், அரிமா சுந்தரம், நேரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.