திண்டுக்கல்

சேவல் வடிவில் அதிசய ‘சவ்சவ்’ காய்

DIN

சிறுமலையிலுள்ள தோட்டத்தில் சேவல் வடிவில் விளைந்த அதிசய சவ்சவ் காய் பொதுமக்களிடையே ஆச்சா்யத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையை அடுத்த பள்ளக்காடு பகுதியில் தனுஷ்கோடிக்குச் சொந்தமான தோட்டத்தில் சவ்சவ், பீன்ஸ், வாழை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளாா். தற்போது, சவ்சவ் அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அறுவடை செய்யப்பட்ட சவ்சவ் காய்களில் ஒன்று சேவல் போன்ற வடிவில் இருந்தது.

சுமாா் 400 கிராம் எடை கொண்ட அந்த காய், சேவலின் தலை, கழுத்து, வால் என அதிசயமாக இருந்தது. இதை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆச்சா்யத்துடன் பாா்த்து சென்றனா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் இதய வடிவிலான பலா விளைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT