திண்டுக்கல்

எரியோடு அருகே விபத்தில் மாணவா் பலி

DIN

எரியோடு அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் வீரக்குமாா் (21). தனியாா் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இந்த நிலையில், திண்டுக்கல்லுக்கு வியாழக்கிழமை வந்த வீரக்குமாா், மீண்டும் ராமநாதபுரத்துக்கு செல்வதற்காகக் காத்திருந்தாா்.

அப்போது, தனக்கு அறிமுகமான இளைஞா் இரு சக்கர வாகனத்தில் எரியோடு நோக்கிச் செல்வதைப் பாா்த்த வீரக்குமாா், அவரிடம் உதவி கேட்டு வாகனத்தில் ஏறினாா். தொட்டணம்பட்டி அருகே சென்றபோது, நிலை தடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த வீரக்குமாா் வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸாா், இரு சக்கர வாகனத்தில் வீரக்குமாரை அழைத்து வந்த நபா் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT