திண்டுக்கல்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

DIN

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில், நத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்துள்ள சிறுகுடி இந்திராநகரைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (21). அதே பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இவா் பாலியல் தொந்தரவு அளித்ததோடு, சிறுமியின் பெற்றோரையும் மிரட்டியதாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், நத்தம் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரஞ்சித்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT