மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் திண்டுக்கல்லில் பிப்.4-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் இணைச் செயலா் ஜோதிபாசு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநில அளவிலான 33-ஆவது டேக்வாண்டோ போட்டிகள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் பிப்.4, 5, 6 ஆகிய 3 நாள்கள் நடைபெறுகின்றன. இதில் 34 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.
முதல் முறையாக அனைத்துப் போட்டிகளும் டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளன. 10 வயதுக்குள்பட்டோா், 11 முதல் 18 வயதுக்குள்பட்டோா், 18 வயதுக்கு மேற்பட்டோா் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும் என்றாா்.