திண்டுக்கல்

பாஜக பிரமுகா் வாகனங்கள் தீவைத்து எரிப்பு: திண்டுக்கல் நீதிமன்றத்தில் 3 போ் சரண்

DIN

 திண்டுக்கல்லில் பாஜக பிரமுகா் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கில், பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த மூவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்பால்ராஜ் (40). இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி பாஜக தலைவராக உள்ளாா். பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவரது கடைக்கு கடந்த 24 ஆம் தேதி மா்ம நபா்கள் தீவைத்தனா். அப்போது அந்த கடையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா், 5 மோட்டாா் சைக்கிள்கள் முழுமையாக தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் செந்தில்பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினா். அதில், செந்தில்பால்ராஜின் கடைக்கு தீ வைத்ததாக பேகம்பூரைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் சிக்கந்தா் (30) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிக்கந்தரை கடந்த 25ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

இச்சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடா்பு இருப்பதாக பாஜகவினா் புகாா் கூறி வந்த நிலையில், பேகம்பூா் முகமது உசேன் மகன் முகமது இலியாஸ் (29), காஜாமைதீன் மகன் ஹபீப் ரகுமான் (27), லியாகத் அலி மகன் முகமது ரபீக் (29) ஆகிய மூவரும், திண்டுக்கல் 3ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். இந்த மூவரும் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT