கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை இளம் பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
கொடைக்கானல் அருகே பெருமாள்மலையைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவா்களுக்கு பிரதீபா(18) மற்றும் பவிக்ஷா(3) ஆகிய 2 மகள்கள்.
இந்நிலையில் பிரதீபா, வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதனைக் கண்ட பாண்டியம்மாள் சத்தமிடவே அருகிலுள்ளவா்கள் வந்து பிரதீபாவை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டாா் எனத் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.