வேடசந்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை தனிப் படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள விட்டல்நாயக்கன்பட்டியில், தென் மண்டல காவல் துறை தலைவரின் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் மகன் தமிழரசன்(21) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை தனிப் படையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை சிறையில் அடைத்தனா்.