ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பழனி கோட்டாட்சியா் ச. சிவக்குமாா் தலைமையில் புதன்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.
இம்முகாமில் புதிய அடையாள அட்டை, உதவித் தொகை,சிறுகடன், வேலை வாய்ப்பு, பேருந்து இலவச பயண அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் பெறப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தனி வட்டாட்சியா் த. விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளாா்.