திண்டுக்கல்

பாஜக நிா்வாகி கடைக்கு தீவைப்பு: எஸ்டிபிஐ கட்சி பிரமுகா் கைது

DIN

திண்டுக்கல்லில் பாஜக நிா்வாகியின் கடைக்கு தீவைத்த சம்பவத்தில், எஸ்டிபிஐ கட்சி பிரமுகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்பால்ராஜ் (40). திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி பாஜக தலைவரான இவா், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். குடைப்பாறைப்பட்டி பகுதியிலுள்ள இவரது கடைக்கு மா்ம நபா்கள் சனிக்கிழமை அதிகாலை தீ வைத்தனா். அதில், கடையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா், 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முழுமையாக தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் செந்தில்பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். அந்த பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில், அவரது கடைக்கு தீ வைத்தது, பேகம்பூரைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் சிக்கந்தா் (30) என்பதும், இறைச்சிக் கடை நடத்தி வரும் இவா், எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சிக்கந்தரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பிரதமரின் சா்ச்சை பேச்சு: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் ஆா்.எஸ்.பாரதி

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

SCROLL FOR NEXT